Tuesday, April 15, 2008

ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல்.

ராமேஸ்வரத்திலிருந்து ரயில்களில் கடத்த முயன்ற நூற்றுக் கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பரமக்குடியில் பிடிபட்டன. ராமேஸ்வரத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக பறக்கும் படை பிரிவுக்கு தகவல் வந்தது. தாசில்தார் இந்திரஜித், வட்ட வழங்கல் அலுவலர் உதயரதி தலைமையில் பறக்கும் படையினர் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்த � ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த 50, 25 கிலோ எடை கொண்ட 19 மூட்டைகளை கைப்பற்றினர். இதே போல எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து பரமக்குடி வந்த ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயிலிலும் நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இங்கு இரு ரயில்களும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்றதால் ஒவ்வொரு பெட்டியிலும் இருந்த அரிசி மூட்டைகள் பிடிபடாமல் தப்பின.

0 comments:

Free Blog CounterLG