Tuesday, April 15, 2008

நறுமண பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்

கொச்சி: நம் நாட்டிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு அதிக அளவில் நறுமண பொருள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் நறுமண பொருள்களில் ரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், இஞ்சி, மிளகாய் வற்றல், வெள்ளை பூண்டு போன்ற நறுமண பொருள்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா பல சிரமங்களை சந்தித்து வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானுக்கு நறுமண பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்திய நறுமண பொருள்கள் வாரியம் தீவிர நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற மார்ச் மாதம் 11-ந் தேதியிலிருந்து 14-ந் தேதி வரை `புட்டெக்ஸ் 2008' என்ற பெயரில் நறுமண பொருள்கள் கண்காட்சியை நடத்தியது.

இதில், நறுமண பொருள்கள், எண்ணெய், ஒலியோ ரெசின், மசாலா, கறி மசாலா மற்றும் மூலிகைகள் இடம் பெற்றன. இந்த கண்காட்சியில் 20 இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கு கொண்டனர். மேலும், இந்த கண்காட்சி ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது.

இக்கண்காட்சியை காண வந்த பார்வையாளர்களுக்கு கேரள புரோட்டாவுடன், கோழிக்கறி, இறைச்சி, மீன் மற்றும் காய்கறி வகைகளுடன் விருந்து அளிக்கப்பட்டது.

0 comments:

Free Blog CounterLG