Tuesday, April 15, 2008

பிரதீபா பட்டீலுடன் புகைப்படம் எடுக்க அலை மோதிய கூட்டம் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து.

சாவ் பாவ்லோ, ஏப்.15- ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தென் அமெரிக்க நாடுகளில் 13 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். நேற்று அவர் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தனது தொடக்க உரையை முடித்த பின்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதீபா பட்டீலுடன் புகைப்படம் எடுக்க ஏராளமான இந்தியர்கள் திரண்டனர்.

ஜனாதிபதியும் அவர்களை சிறுசிறு குழுவாக அழைத்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார். அரை மணி நேரத்துக்கு மேலாகியும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. கியு வரிசை நீண்டுகொண்டே இருந்தது.

நிகழ்ச்சி அமைப்பாளர்களாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி ஜனாதிபதியின் பாதுகாவலர்கள், பாதுகாப்பு காரணம் கருதி நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதீபா பட்டீலை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

0 comments:

Free Blog CounterLG