Tuesday, April 15, 2008

180 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறின

நெல்லையில், 180 கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மடாதிபதிகள் முன்னிலையில் இந்து மதத்திற்கு மாறினர்.

நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில், தாய் மதம் திரும்பும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார்.

இதில் மாநில இந்து துறவிகள் பேரவை தலைவர் சுவாமி சதாசிவானந்தா, ராகவானந்தா, சங்கரானந்தா, ராமகிருஷ்ணானந்தா உள்ளிட்டோரும், மடாதிபதி செங்கோல் ஆதீனமும் கலந்து கொண்டனர்.

மதம் மாறியவர்களுக்கு 9 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைத் தெளித்து பாத பூஜை செய்யப்பட்டது.அதன் பின்னர் மதம் மாறியவர்கள் அத்தனை பேரும் நெல்லையர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

0 comments:

Free Blog CounterLG