Tuesday, April 15, 2008

தேர்தல் கமிஷனுக்கு நோட்டிஸ்

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கந்தசாமி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு முறையே 138 மற்றும் 142 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்த போக்கை நீடிக்க அனுமதித்தால் , உள்ளூர் நலன்களில் அக்கறை கொண்டுள்ள மாநில கட்சிகள் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மட்டுமே பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் , இது குறித்து ஆறு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

0 comments:

Free Blog CounterLG