Thursday, April 17, 2008

IPL கிரிக்கெட் போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.


உலக விளையாட்டு வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்திய பிரிமியர் லீக்(IPL) கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிகிழமை இந்தியாவின் பெங்களூர் நகரில் தொடங்குகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம்(BCCI) இதுவரை தேசிய,மாநில மற்றும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மேலும் வர்த்தக ரீதியில் வளர்க்கும் நோக்குடன் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி, தனியார் கிரிக்கெட் சங்கங்களை தொடங்கி அதில் சர்வதேச வீரர்களுடன் இந்திய வீரர்களும் பங்கேற்கும் போட்டித் தொடரை நடத்தும் நவடிக்கையில் இறங்கியுள்ளது. வர்த்தக ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பல சர்ச்சைகளையும் ஏறடுத்தியுள்ளது.

ஏகப்பட்ட பண முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகளில் தொழிலதிபர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ஈடுபட்டுள்ளனர். சில வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலத்தின் மூலம் சந்தைகளில் பொருட்கள் வாங்கப்படுவது போல வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG