Thursday, April 17, 2008

பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது: கி.வீரமணி

பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது: கி.வீரமணி


வேலூர் சிறையில் நளினியை சந்தித்து உரையாடிய பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பகை எண்ணம், பழி உணர்வு, கோபம் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த உணர்வு என்னை ஆட்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என நளினி சந்திப்பு குறித்து பிரியங்கா கூறியுள்ளதும், இதே கருத்தை ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளது அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்திட இந்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தவேண்டும். ராணுவ நடவடிக்கையால் இலங்கை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது, அரசியல் தீர்வே உகந்தது என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




0 comments:

Free Blog CounterLG