Thursday, April 17, 2008

இந்து கடவுள்கள் அவமதிப்பு: நடிகர் சரவணன் படத்தின் தொடக்க விழாவுக்கு போலீஸ் தடை

இந்து கடவுள்கள் அவமதிப்பு: நடிகர் சரவணன் படத்தின் தொடக்க விழாவுக்கு போலீஸ் தடை

சென்னை: நடிகர் சரவணன் நடிக்கும் 'வணக்கம்மா' திரைப்படத்தின் தொடக்க விழா பூஜைக்கான அழைப்பிதழ்கள் மற்றும் போஸ்டர்கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பதாகக் கூறி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று நடைபெறவிருந்த அப்படத்தின் பூஜைக்கு போலீசார் தடை விதித்தனர்.


'வணக்கம்மா' என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள புதிய படத்தில் நடிகர் சரவணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மதன்பாப், தியாகு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுவாதி என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்துக்காக ராமன், அனுமன் வேடத்தில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ்களும், போஸ்டர்களும் இந்து கடவுள்களை அவமதிப்பாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டினர்.


இந்நிலையில் இன்று இப்படத்தின் தொடக்க விழாவுக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொடக்க விழாவில் பங்கேற்க திரையுலக பிரபலங்கள் பலரும் அங்கு வந்தனர்.


இவ்விழாவைக் கண்டித்து இந்து முன்னணியினரும் அங்கு திரண்டதால் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று படத்தின் தொடக்க விழாவுக்கு தடை விதித்தனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் ஹரிராம், கடவுள் பற்றி எந்த விமர்சனமும் படத்தில் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகளும் படத்தில் இருக்காது என்றார்.





0 comments:

Free Blog CounterLG