Thursday, April 17, 2008

காங்கோவில் வீடு மீது விமானம் மோதியதில் 21 பேர் பலி.


ஆப்பிரிக்காவில் காங்கோ நாட்டில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது, அது வீடுகள் மீது மோதியது. இதில் 21 பேர் பலியானார்கள். இறந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா, அல்லது வீடுகளில் வசித்தவர்களா? என்பது தெரியவில்லை.79 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஆப்பிரிக்காவில் உள்ளது காங்கோ நாடு. இந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரில் இருந்து ஒரு தனியார் விமானம் 7 சிப்பந்திகள் மற்றும் 79 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் மத்திய காங்கோவில் உள்ள கிசன்கானி என்ற நகருக்கு புறப்பட்டது. அப்போது பலத்த மழை பெய்தது. ஓடுபாதையில் சென்ற விமானம் அதை விட்டு விலகி, எல்லைச்சுவரை இடித்துக்கொண்டு வெளியேறி, வீடுகள் மீது இடித்தது.இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். இவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்தவர்களா? அல்லது வீடுகளில் இருந்தவர்களா? என்பது தெரியவில்லை.55 பயணிகள் காயம்விமானத்தில் இருந்தவர்களில் 55 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அந்த நகரில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.விமானம் தரையை விட்டு உயரக் கிளம்பவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி ஆஸ்பத்திரிகளில் சேர்த்தோம் என்று விமானக் கம்பெனி டைரக்டர் டிர்க் கிராமர்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு எரிமலை ஒன்று வெடித்ததால், அதில் இருந்து கிளம்பிய எரிமலைக்குழம்பு விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் பாய்ந்ததால், விமானநிலையத்தின் ஓடுபாதையில் 3-ல் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, பயனற்றுப்போய்விட்டது. இதனால் விமானங்கள் ஓடுபாதையில் ஓடி உயரக்கிளம்புவது சிரமமாக உள்ளது.டயர் வெடித்தது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விமானப் பயணிகளில் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், "விமானம் உயரக்கிளம்புவதற்காக வேகம் எடுத்தபோது, விமானத்தின் டயர்களில் ஒன்று வெடித்தது. விமானம் வீடுகள் மோதிய இடத்தில் கரும்புகை எழுந்தது. மக்கள் வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்'' என்றார்.

காங்கோ நாட்டில் விமானப்பாதுகாப்பு மிகமோசமான அளவில் இருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்துக்கு சொந்தமான கம்பெனியை கடந்த வாரம்தான் ஐரோப்பிய ஒன்றியம் கறுப்பு பட்டியலில் சேர்த்தது. அந்த கம்பெனியின் விமானங்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தது.

0 comments:

Free Blog CounterLG