புதுதில்லி, ஏப். 16: வரலாறு காணாத பாதுகாப்புடன், ஒலிம்பிக் ஜோதி வியாழக்கிழமை இந்தியாவிற்கு எடுத்து வரப்படவுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி தொடங்கப்படவுள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஒலிம்பிக் ஜோதி உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
5 கண்டங்கள், 21 முக்கிய நகரங்கள், 1,37,000 கிலோ மீட்டர் தொலைவு கடக்கவுள்ள ஒலிம்பிக் ஜோதி, 130 நாள்கள் பயணமாகி, இறுதியாக போட்டி தொடங்கவுள்ள பெய்ஜிங் தேசிய ஸ்டேடியத்தில் ஏற்றப்படும்.
அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜோதி 72 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இதன் எடை 985 கிராமாகும்.
கடும் தட்ப-வெப்பம், சூறாவளி காற்று, குறைந்த அழுத்தம் போன்ற எதையும் தாங்கிச் செல்லும் வகையில் ஒலிம்பிக் ஜோதி வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும்.
இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி இந்தியா வரும்பொழுது, அதன் தொடர் ஓட்டத்தில் 47 வீரர்கள் உட்பட 70 பேர் பங்கேற்கின்றனர்.
Thursday, April 17, 2008
ஒலிம்பிக் ஜோதி இன்று இந்தியா வருகை!
Posted by
udanadi
at
4/17/2008 05:36:00 AM
Labels: இந்தியா, ஒலிம்பிக், ஒலிம்பிக் ஜோதி, சீனா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment