Thursday, April 17, 2008

கொலை நகராகும் சென்னை : அதிர்ச்சி தகவல்.


சென்னை நகரில் கடந்த ஆண்டு மட்டும் 135 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை நகரில் மட்டும் 135 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது குறித்து காவல்துறை நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் 22 கொலைகளும், செப்டம்பர் மாதத்தில் 18 கொலைகளும் நடைபெற்றிருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, குடும்ப சண்டை, நிலப்பிரச்னை, தவறான நடத்தை போன்றவை, காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி இருப்பவர்களாலும் பிரச்னைகள் ஏற்பட்டு கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாட்டு நாகரீக மோகம் சென்னை மக்களிடம் வெகுவாக அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாகவே, பாலியல் சம்பந்தமான கொலைச் சம்பவங்கள் சென்னையில் பெருகி வருவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG