Thursday, April 17, 2008

தூத்துக்குடி மாநகராட்சி ஆகிறது, தமிழகத்தில் மாநகராட்சிகள் எண்ணிக்கை

சென்னை, ஏப்.17-தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றுடன் வேலூரும் மாநகராட்சியாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது.10-வது மாநகராட்சிஇப்போது தூத்துக்குடி நகராட்சியும் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக ஆகிறது. இதன் மூலம் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி நகரம் விளங்குகிறது. பெருகிவரும் தொழிற்சாலைகளாலும், வளர்ந்து வரும் துறைமுகத்தாலும், அமையவுள்ள சேது சமுத்திர கால்வாய் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், இந்நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

பின்னர் மற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG