Thursday, April 17, 2008

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதி.

ஏப்ரல் 26-ம் தேதி ஒலிம்பிக் தீபம் ஜப்பான் வருகிறது. ஒலிம்பிக் தீப ஓட்டம் நகனோ நகரில் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் தீப ஓட்டத்தின்போது இடையூறு ஏற்படாமல் இருக்க ஜப்பான்  தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அன்று நடைபெறவிருந்த சிறப்பு நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் தீபம் ஏப்ரல் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும். இந்த ஒலிம்பிக் தீபம் ஆகஸ்ட் 8-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்து சேரும்.  அன்று ஒலிம்பிக் துவக்க விழா  கோலாகலமாக நடைபெறும்

0 comments:

Free Blog CounterLG