Monday, April 21, 2008

பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி

புதுடில்லி, ஏப். 20- நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் தெரிவித்தனர்.
இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போரின் 150 ஆவது நிறைவு விழாவினையொட்டி நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. விரைவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றார். நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக ஒரே நாளில் அதிசயம் நிகழ்ந்துவிடாது. இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் விலையை அரசால் கட்டுப் படுத்த முடியாது எனினும் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை, வரும் வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது. இவற்றின் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்து உள்ளது என்று கூறினார்.

0 comments:

Free Blog CounterLG