Sunday, April 20, 2008

ஆன்லைன் வர்த்தகம்: மா. கம்யூ எதிர்ப்பு

ஆன்லைன் வர்த்தகம் காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது என்றும், எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியிருக்கிறார்.

மதுரையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வை எதிர்த்து போராடும் அதேவேளையில், வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் போராடும் என்றார்.

தொழிலாளர்நல வாரியங்களின் குறிப்பிட்ட சில பணிகளை வருவாய்த் துறைக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் வரதராஜன் கூறினார்

0 comments:

Free Blog CounterLG