Sunday, April 20, 2008

காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு

ஆந்திராவில் உள்ள கர்னூல் உட்பட்ட காவல் நிலையத்தில் திருட்டு குற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண் ஒருவர் நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற கிராம மக்கள் காவல் நிலையம் மீது கல்எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பீய்ச்சி அவர்களை விரட்டியடித்தது காவல் துறை.

பெண் ஒருவர் நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார்

கடந்த திங்கள் கிழமை அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு வயது 31, நேற்று சனிக்கிழமை அவரை சந்திக்கச்சென்றவர்கள் தன்னை சப் இன்ஸ்பெக்டர் அரோஹனா ராவ் மானபங்கம் செய்துவிட்டார் என்றதை அடுத்து கிராம்மக்கள் வெகுண்டெழுந்தனர்.

சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் காவல்துறை இல்லாத காவல் நிலையத்தில் பெண் ஒருவர் இரவில் தங்கவைக்ககூடாது எனகிறது சட்டம். அதிலும் குற்றம் சுமத்தப்பட்டவர் ஒருநாளைக்கும்மேல் காவல் நிலையத்தில் தங்க வைக்க கூடாது என்கிறது குற்றவியல் சட்டம்.


0 comments:

Free Blog CounterLG