Sunday, April 20, 2008

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்




மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

தங்கக் குதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்திற்கு நடுவே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

இதற்காக நேற்றிரவு முதலே மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டது. அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள்.

பச்சைப் பட்டாடை உடுத்தி வந்த கள்ளழகர், காலை 7.30 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். கூடியிருந்த பக்தர்கள் அழகரை தரிசித்து பரவசம் அடைந்தனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் காண பக்தர்கள் மதுரைக்குச் செல்ல ஏதுவாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

முன்னதாக நேற்று மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது.

0 comments:

Free Blog CounterLG