Monday, April 21, 2008

பெண்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசை


புதுடில்லி, ஏப். 20- பாசிட்டிவ் தொலைக்காட்சி குழுமத்தின் ஒரு பகுதியாக முழுக்க முழுக்க பெண்களால் செயல்படுத்தப்படும் போகஸ் (Focus) தொலைக்காட்சி என்ற அலைவரிசை இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. 24 மணி நேர செய்தி அலைவரிசையாக இது இருக்கும். இரு மொழிகளில் ஒளிபரப்பப்படும். பெண் பத்திரிகையாளர் மனோ ரஞ்சனா தலைமையில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஏராளமான பெண்கள் இதில் பணியாற்றுகின்றனர். மொத்தம் நூறுபேரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலையில் அலுவலகம் வரும் பெண்கள் செய்தி சேகரிக்க தொலைக்காட்சி புகைப்படக் கருவியுடன் அவசரமாக புறப்பட்டு செல்கின்றனர். ஏற்கெனவே 17 பெண்கள் கொண்ட குழுவில், பெண்கள் பிரச்சினை தொடர்பாக 7000 நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்துள்ளனர். கனடாவில் டபிள்யூ நெட், பிரிட்டனின் லிவிங் சேனல், அமெரிக்காவின் லைப்டைம் தொலைக்காட்சி போன்றவையும் முழுக்க முழுக்க பெண்களால் செயல்படுத்தப்படுகின்றன. நாங்கள் தேர்வு செய்துள்ள பெண்களுக்கு மருத்துவம், பேஷன், வாழ்க்கை முறை போன்ற நிகழ்ச்சியில் ஆர்வம் இல்லை, அரசியல், புலனாய்வு போன்றவற் றில் தான் ஆர்வமாக உள்ளார். ஒருவேளை மருத்துவம், பேஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆண்களை தேர்வு செய்யும் நிலை ஏற்படலாம் என்று நகைச்சுவையாக கூறுகிறார் மனோரஞ்சனா. நொய்டாவில் உள்ள போகஸ் தொலைக்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டு பிரம்மாண்டமான தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தப்படுகிறது

0 comments:

Free Blog CounterLG