Monday, April 21, 2008

நேபாள அரசர் இந்தியாவில் தஞ்சம்(?)

நேபாள மன்னர் ஞானேந்திரா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தஞ்சமடையலாம் என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் அரசியல் நிர்ணயசபை தேர்தல் நடத்தப்பட்டு மாவோயிஸ்டுகள் பெருமளவில்வெற்றி பெற்றுள்ளனர். அங்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில், மன்னர் ஆட்சி ரத்து செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து நேபாள மன்னர் ஞானேந்திரா தனது குடும்பத்தினரோடு இந்தியாவில் தஞ்சமடையவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகரில் தஞ்சமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

மன்னர் ஞானேந்திராவின் மருமகள் ஹிமானி இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேபாள மன்னரிடமிருந்து புகலிடம் கேட்டு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

0 comments:

Free Blog CounterLG