Monday, April 21, 2008

மே 15-ல் பிளஸ் 2' தேர்வு முடிவு?

மே 15-ல் பிளஸ் 2' தேர்வு முடிவு?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற "பிளஸ் 2' தேர்வு முடிவுகள் வரும் மே 15-ம் தேதி வெளியாகலாம் என்று தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெற்றது. அதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடித்து, முதன்மைப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தாள்கள் தற்போது திருத்தப்படுகின்றன.

விடைத்தாள் திருத்தும் பணி சில தினங்களில் பூர்த்தியாகிவிடும். அதன் பின் அரசுத் தகவல் தொகுப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு கம்ப்யூட்டர் உதவியுடன் எந்தத் தாள் யாருடையது என்று பதிவு செய்து, அத்தாளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஆகியவை பதிவு செய்யப்படும்.

"பிளஸ் 2' விடைத்தாள் திருத்தும் பணியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான தேர்வுத் தாள் திருத்தும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

"பிளஸ் 2' தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், பாதிக்கு மேல் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தேர்வுத் தாள் திருத்தும் பணி பூர்த்தியாகி, முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மே 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாயின. இந்த முறை அதற்கேற்ப திருத்தும் பணி நடைபெறும்.

பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே முதல் வாரத்திலேயே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட 10-ம் வகுப்புத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இரு தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. அநேகமாக ஒரு சில நாள்களில் இப்பணியும் பூர்த்தியாகிவிடும் எனத் தெரிகிறது.

0 comments:

Free Blog CounterLG