Monday, April 21, 2008

தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில்

தண்டனை முடிஞ்சது; ரிலீஸ் எப்போ? கேட்கின்றனர் 'சிறைப் பறவைகள்'


தமிழகத்தில் சென்னை புழல், வேலூரில் 2 பெண்கள் சிறை, சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகள், 14 கிளை சிறைகள், 1 சிறுவர் சிறை, 1 திறந்த வெளி சிறை, 6 சிறப்பு கிளை சிறைகள் உள்ளன. 9 மத்திய சிறைகளிலும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். கொலை, ஆதாயக்கொலை, கற்பழித்து கொலை, பரோலில் சென்று தப்பிய வழக்கு என கைதிகளுக்கு ஆயுள் (20 ஆண்டுகள்), 10 ஆண்டுகள் என குற்றங்களுக்கு ஏற்ப கோர்ட் மூலம் தண்டனை கிடைக்கிறது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் ஆயுள் கைதிகளின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் கழித்தால் போதும். நன்னடத்தை விதிமுறைப்படி அண்ணாதுரை பிறந்த நாளில் பொதுமன்னிப்பு அளித்து கைதிகள் பலரை விடுதலை செய்வது வழக்கம். நன்னடத்தையுடன் சில கைதிகள் நடந்து கொண்டாலும் அவர்கள் நன்னடத்தை பட்டியலில் சேர்க்கப்படுவது இல்லை. கொலை கைதி மீது கற்பழிப்பு குற்றம் சேர்ந்திருந்தாலும், போலீசாரை தாக்கி விட்டு தப்பியதாக வழக்கு இருந்தாலும் நன்னடத்தை பட்டியலில் அவர் இடம் பெற மாட்டார். இதுபோல் பல காரணங்களால் கைதிகளுக்கு நன்னடத்தைப்படி பொதுமன்னிப்பு வழங்கப்படுவது கிடையாது. கைதி ஒருவரை பொதுமன்னிப்பில் விடுவிக்க கலெக்டர் தலைமையில் "பரிந்துரை குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதில் கைதியின் சொந்த மாவட்ட கலெக்டர், சிறைத்துறை கண்காணிப்பாளர், மண்டல நன்னடத்தை அலுவலர், செஷன்ஸ் நீதிபதி, சமூக பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் உறுப்பினர்கள். பரிந்துரை குழுவிடம் செல்லும் பொதுமன்னிப்பு மனுக்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்கப்படும். பொதுமன்னிப்பு கோராத கைதிகள், தண்டனை காலம் முடிந்த பிறகும் சட்டப்படியான விடுதலைக்காக பரிந்துரை குழுவின் தடையில்லா சான்று பெற வேண்டும். கைதிகள் மீதான கோரிக்கை மனுக்களை தனித்தனியாக பரிந்துரைக்குழு பரிசீலிக்கும். இதற்காக கூடுதல் அவகாசம் பரிந்துரைக்குழுவுக்கு தேவைப்படுவதால் தண்டனை காலம் முடிந்த பிறகும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். மதுரை மத்திய சிறையில் மட்டும் பல்வேறு வழக்குகளில் 8 கைதிகள் தண்டனை காலம் முடிந்தும் விடுதலையின்றி ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை சிறையில் உள்ளனர். வயதான கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி கூறினார். மதுரை உட்பட மாநிலம் முழுவதும் தண்டனை காலம் முடிந்தும் பரிந்துரைக்குழுவின் தாமதத்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

0 comments:

Free Blog CounterLG