Monday, April 21, 2008

பருப்பு, எண்ணெய் வாங்கிவர வெளிநாடு விரையும் தமிழக அதிகாரிகள்

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்படும் தமிழ்நாட்டில், இதர பொருட்களும் போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள், பாமாயில் உற்பத்தி இந்தியாவில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியன்மார் (பர்மா) நாட்டில் இருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்யுமேன தமிழகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக, உணவு வழங்கல் துறை ஆணையர், நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அடங்கிய குழு இம்மாதம் 24ல் வெளிநாடுகளுக்குச் செல்கிறது.

இதற்கிடையே துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட, கனடாவில் இருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து சோதனை முறையில் குறைந்த விலையில் பொது விநியோக திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் சனிக் கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
சமையல் எண்ணெய், அரிசி இருப்பு வைப்பதில் வியாபாரிகளுக்கு உடனடியாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதை தீவிரமாக அமல்படுத்துவது,மொத்த விற்பனையாளர், சில்லறை வணிகர்கள், சரக்குகளை இருப்பு வைக்க வரம்பு;கோதுமை. ரவை, மைதா ஆகியவற்றை பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வது; உணவுப் பொருட் களைப் பதுக்குவதையும் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதையும் தடுக்க தீவிர கண்காணிப்பு;நீண்டகாலத் தீர்வாக, தமிழ் நாட்டில் நெல் உற்பத்தி திறனை அதிகரிப்பது; பயறு, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்குவது ஆகியவை அரசு எடுத்துள்ள முடிவுகள்.

0 comments:

Free Blog CounterLG