Monday, April 21, 2008

ஈரான் அதிபர் இநதியா வருகிறார்

ஈரான் அதிபர் இநதியா வருகிறார்

ஈரான் அதிபர் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அவர் அடுத்த வாரம் இலங்கை செல்லும் வழியில் இந்தியா வருகிறார்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்துவருவதாக கூறி அந்நாட்டின் மீது ஐ.நா.பாதுகாப்பு சபை மூலமாக அந்நாட்டுக்கு பல தடைகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. அணூ ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரான் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் விஷயத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை செல்லும் வழியில் ஈரான் அதிபர் முகம்மது அஹமதிநிஜாத் இந்தியாவுக்கு வருகிறா. இவர் இந்தியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை செல்லும் வழியில் குறுகிய பயணமாக அஹமதிநிஜாத் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகிறார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.

ஈரான் ஒரு பழமை நாகரீகம் கொண்ட நாடு. இந்தியா வரும் ஈரான் அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். ஈரான் மிகவும் செல்வாக்கு மிகுந்த நாடு என்றும் அவர் கூறினார்.

மற்ற நாடுகளை காட்டிலும் ஈரானுடன் இந்தியா நல்ல உறவுகளை வைத்துக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஈரான் விஷயத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பேச்சு நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு எம்.கே.நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற 28 ம் தேதி இரண்டு நாள் பயணமாக ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் இந்தியா மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG