Sunday, April 13, 2008

நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியில் இது வதந்தி என்று தெரிய வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது, எதிர்முனையில் பேசிய நபர், நீதிமன்றத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து அந்த வளாகம் முழுவதும் பரபரப்பும், பீதியும் நிலவியது. நீதிமன்ற ஊழியர்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை.

இறுதியில் குண்டு இருப்பதாகக் கூறப்பட்டது வதந்தி என்று தெரிய வந்தது. இதன் பின்னரே நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

0 comments:

Free Blog CounterLG