Sunday, April 13, 2008

மே 2வது வாரத்தில் பிளஸ் 2 தே‌ர்வு முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவுக‌ள் மே மாத‌ம் 2வது வார‌த்‌தி‌ல் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று ப‌ள்‌ளி‌ க‌ல்வ‌ி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த மாத‌ம் நட‌ந்த பிளஸ் 2 தேர்வை 6 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இதை‌த் தொட‌ர்‌ந்து விடைத்தாள் திருத்தும் பணி த‌மிழக‌ம் முழுவது‌ம் 47 மையங்களில் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ‌இ‌ந்த ப‌ணிக‌ள் முடிந்து விடும்.

இதையடுத்து மதிப்பெண் கூட்டி பதிவு செய்யும் பணி கிண்டியில் உள்ள டேட்டா எண்ட்ரி மையத்தில் நடைபெற உள்ளது. மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் பிழைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பல்வேறு கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகை‌யி‌ல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ‌தீ‌விரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு மே மாத‌ம் 14ஆ‌ம் தேதி வெளியிடப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் தாமதம் இல்லாமல் மே 2-வது வாரத்தில் வெளியாகும்.

மாணவ‌ர்க‌ள் மேல்படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தேர்வு முடிவுகள் தாமதம் இல்லாமல் வெளியிட தேர்வுத்துறை அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றினா‌ர்.

0 comments:

Free Blog CounterLG