Sunday, April 13, 2008

விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை பாதிக்கும!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் தடைபடும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.டெல்லியில் நேற்று நடந்த சர்வதேச வேளாண் தொழில்முறை மாநாட்டில் பேசிய போது இதனை தெரிவித்த பிரதமர், அத்தியாவசிப் பொருட்கள் விலை ஏற்றத்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என்றாலும், அதனை செயல்படுத்த விலைவாசி உயர்வு பிரச்சனை தடையாக இருப்பதாக தெரிவித்த பிரதமர், பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டியிருந்தாலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் சுட்டிக் காட்டியுள்ளதையும் மேற்கோள் காட்டினார்.

தற்போதைய சூழலில் 2வது பசுமைப் புரட்சி நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும், அதை நவீன தொழில்நுட்பம், புதிய நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் சரியான திட்டமிடல் ஆகியவற்றின் மூலமே எட்ட முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

0 comments:

Free Blog CounterLG