Sunday, April 13, 2008

அகதியாய் வந்தவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.

அகதியாக சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய அங்கோலா நாட்டவரான ரிகாடோ லுமேன்கோ உணவு விடுதிகளில் பாத்திரங்கள் கழுவும் வேலையில் ஆரம்பித்து, தற்போது சுவிஸ் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1982ம் ஆண்டு தனது 20-வது வயதில் இவர் தனது தாய்நாடான அங்கோலாவிலிருந்து சுவிட்சர்லாந்த் வந்தார்.

லுமேன்கோ ஒரு உணவு விடுதியில் பாத்திரங்கள் கழுவும் வேலையில் இருக்கும் போதே 'பேர்ன்' மாநிலத்தில் பேசப்படும் 'டச்' மொழியை கற்றுக்கொண்டார். அதனால் அவர் சுவிஸ் மக்களுடன் இலகுவில் சேர்ந்து பழகக் கூடியதாக இருந்தது. லுமேன்கோ சமூக நீதிக்காக அங்கோலாவில் போராடியதால், தஞ்சம் கோரிய நாட்டான சுவிட்சர்லாந்திலும் அவர் SP கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

2007ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், SVP கட்சியினரின் 'கறுப்பு ஆட்டுப் பிரச்சாரம்' இருந்தபோதும், சுவிஸ் பாராளுமன்றத்தில் முதலாவது கறுப்பினத்தவராகத் தேர்வானார்.

0 comments:

Free Blog CounterLG