Sunday, April 13, 2008

உயரும் பணவீக்கம்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை


நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்என்றும், இதனை குறைக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சர்வதேச நிதியத்தின் இயக்குனர் (ஆசிய மற்றும் பசிபிக் பிரிவு) டேவிட் பர்டன் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நிதியத்தின் மூத்த ஆலோசகரான கல்பனா கோச்சார் பேசுகையில், 7.5 சதவீத அளவு வரையிலான பணவீக்கம் மிகவும் உயர்வானது இல்லை என்றாலும், அரசியல் அரங்கில் இதுபெரும் புயலை கிளப்பியுள்ளது என்றார்.

உணவு, பெட்ரோல்-டீசல் மற்றும் சில உலோகங்களின் விலை உயர்வு காரணமாகவே இந்தியாவின் பணவீக்கம் 7.5 என்ற அளவை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Free Blog CounterLG