Sunday, April 13, 2008

ஆப்கானில் 2 இந்திய என்ஜினியர்கள் கொலை

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை தாக்குதலில் இந்திய என்ஜினியர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் நிம்ராஸ் மாகாணத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணியில் இந்தியாவைச் சேர்ந்த சாலை பணியாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை இந்திய பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்திய என்ஜினியர்கள் 2 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

தாலிபான் இயக்கம்தான் இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் சாலை அமைப்பது, மின்சார உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் இந்திய பணியாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களில் பலரை தாலிபான் தீவிரவாதிகள் கடந்த காலங்களில் கடத்தி சென்றதும் , தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG