Monday, April 14, 2008

கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தடை விதிப்பதா? சித்திரை பிறப்பையொட்டி, இந்துக் கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். இந்தாண்டு பஞ்சாங்கம் படிக்க, தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக தடை விதித்துள்ளது. இதனால், பல கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நாத்திக போக்கை கண்டிக்கிறோம்.
இருப்பினும், கோயில்களில் இந்து அமைப்புகளால் தடையை மீறி பஞ்சாங்கம் படிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் விரிவான செய்திக்கு.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080413105640&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

0 comments:

Free Blog CounterLG