Monday, April 14, 2008

பொறியியல் பட்டதாரியா நீங்கள்?

பொறியியல் பட்டதாரியா நீங்கள்?

சென்னை, ஏப். 13: தமிழகத்தில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு 2) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் பொறியியல் அல்லது அது தொடர்பான படிப்பைப் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தொழில்நுட்பப் பணியாளர்கள், இதர பணியாளர்களுக்கான காலியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படாமல் உள்ளன.
13ஆண்டுகளாக... சென்னை அயனாவரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் 60 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 30 பேர் மட்டுமே உள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 7 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 பேர் மட்டுமே உள்ளனர். இதே நிலை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காணப்படுகிறது.
""1995-க்குப் பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாளர் நியமனம் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளில் ஊழியர்கள் ஓய்வு, பதவி உயர்வு என சென்றுவிட்ட நிலையில் தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன'' என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர்.
விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080413140450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

0 comments:

Free Blog CounterLG