Monday, April 14, 2008

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க செயலாளர் வை.கோ அவர்கள் தமிழ் மக்கள் முன் சிறப்புரை நிகழ்த்தினார்




நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க செயலாளர் திரு. வை.கோபாலசாமி அவர்கள் தமிழ் மக்கள் முன் சிறப்புரை நிகழ்த்தினார்


திடிரென ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்தில் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தமிழீழப் போராட்டம் பற்றி உணர்வுடன் பேசினார்
அடிக்கடி மக்களின் கைதட்டலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் தென்னாபிரிக்கா, இஸ்ரேல் , கொசோவா விடுதலை பற்றியும் ஆழ்ந்த உரை நிகழ்த்தினார்.


தமிழீழம் கனவல்ல விரைவில் மலரும் எனக்கூறிய வை.கோ உலகெங்கம் பரந்து வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் வரலாற்று கடமை பற்றி கூறுகையில் வாழ்நதோம் செத்தோம் என வாழ்ந்து விட்டு போகாமல் அனைவரும் தம்மால் ஆன பங்களிப்பை செய்யும்படியும் வலியுறுத்தினார்.


தம்பி பிராபாகரன் எந்த ஒரு நாட்டின் உதவியும் இன்றி விரல்விட்டு எண்ணகக்கூடிய போராளிகளுடன் ஆரமபித்து இன்று உலகம் வியக்கத்தக்க வகையில் போரட்டத்தை வழிநடத்தி செல்கின்றார்.


மேலும் எந்த ஒரு விடுதலை இயக்க தலைவர்களுடனும் ஒப்பிட முடியாதளவிற்கு அற்புதமான தலைவர் தம்பி பிரபாகரன் என தன் மதிப்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டார்.





0 comments:

Free Blog CounterLG