Monday, April 14, 2008

மலேசிய பிரதமர் பதவி விலக வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹத்திர் மொகமத்


மலேசியாவில் செல்வாக்கு மிகுந்த முந்நாள் பிரதமர் மஹதிர் மொகமத் அவர்கள் தமக்கு அடுத்து பிரதமராக வந்த அப்துல்லா படாவி அவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.

அவர் உடன் பதவி விலகாமல் முன்னர் சொன்னது போல அடுத்தாண்டுத் தொடக்கம் வரை இழுத்தடித்தாரென்றால் பிரதான ஆளும் கட்சி இரண்டாக உடைந்து போகும் என்று முந்நாள் பிரதமர் மஹத்திர் மொகமத் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் என்றுமில்லாத அளவுக்குக் கண்ட தோல்விகளை அடுத்து பிரதமர் அப்துல்லா படாவியைக் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முந்நாள் பிரதமரும் ஒருவர்.

தனக்கடுத்த பிரதமராக வர படாவியைத் தேர்ந்தெடுத்த மஹத்திர் அவர்களே இவ்வாறு அவரை இப்போது கடுமையாக விமர்சிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG