Monday, April 14, 2008

ஜிம்பாப்வே தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு



ஜிம்பாப்வேவில் நடந்த பொதுத்தேர்தலின் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாக அந்நாட்டின் பிரதான எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

23 தொகுதிகளின் வாக்குகளை மீண்டும் எண்ணும் படி தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை இது ஆரம்பமாகவுள்ளது.

ஒன்பது தொகுதிகளின் முடிவுகள் மாறினால் அதிபர் முகாபேயின் ஸானு பி எஃப் கட்சி இழந்த நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கம் தேர்தல் முடிவுகளில் மோசடி செய்ய முயல்கிறது என பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் கூறுகிறது.

அதிபர் தேர்தலின் முடிவுகள் தேர்தல் நடந்து இரண்டு வாரங்களாகியும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Free Blog CounterLG