Monday, April 14, 2008

பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு புதிய பெயர் -முதல்வர் கலைஞர் உத்தரவு.

சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு 'சவுந்திர பாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்ற புதிய பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தின் பெயர்ப் பலகை மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கே.கே. நகர் காவல்நிலையம் என்று இருப்பதை இனி கலைஞர் கருணாநிதி நகர் காவல் நிலையம் என்று அழைக்கும்படி மாநகரக் காவல் துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தி.நகர். துணை ஆணையாளர் அலுவலகம், தி.நகர் உதவி ஆணையாளர் அலுவலகம் என்று அழைக்கப்பட்டவை தியாகராயர் நகர் துணை ஆணையர் அலுவலகம், தியாகராயர் நகர் உதவி ஆணையர் அலுவலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG