Monday, April 14, 2008

கென்யாவில் அதிகாரப் பகிர்வு அமைச்சரவை



கென்ய அதிபர் ம்வேய் கிபாக்கி அவர்கள் அதிகாரப் பகிர்வு அமைச்சரவையை அறிவித்துள்ளார். கூட்டரசின் அமைச்சரவை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து வாரக்கணக்கில் நடந்த பேரப்பேச்சுக்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
புதிய பிரதமாராகப் பதவியேற்கவுள்ள எதிரணித் தலைவர் ரைலா ஒடிங்கா சகிதம் அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து எழுந்த வன்முறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கென்யர்கள் பலியான பின்னணியில் இரண்டு தலைவர்களும் கடந்த பிப்ரவரியில் அதிகாரப்கிர்வுக்கு உடன்பாடு கண்டனர்.

0 comments:

Free Blog CounterLG