Monday, April 14, 2008

கோல்கத்தா - டாக்கா ரயில் சேவை தொடங்கியது

கோல்கத்தா - டாக்கா இடையேயான மொய்த்ரி எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது.பெங்காலி புத்தாண்டு தினத்தையொட்டி இன்று இச்சேவை தொடங்கியது.

கோல்கத்தா ரயில் நிலையத்தில் இன்று காலை 7.10 மணியளவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடி அசைத்து இந்த ரயில் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில் சேவை துவக்க விழாவில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இந்த சேவை இயக்கப்படும்.இரவு 10.30 மணிக்கு டாக்கா சென்றடையும் இந்த ரயில், டாக்காவிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கோல்கத்தாவுக்கு இரவு 9 மணிக்கு வந்தடையும்.

விழாவில் இந்த ரயில் சேவையை துவக்கி வைத்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, இந்த நிகழ்ச்சி தனது வாழ்வில் மறக்க முடியாத நினைவில்கொள்ளத்தக்க ஒன்று எனக் கூறினார்.

முன்னதாக கோல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்ட ரயில், நாடியா மாவட்டத்தில் நுழைந்தபோது தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒரு கும்பல் ரயிலை மறித்து, பங்காளதேஷ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும் என கோஷம் எழுப்பியது.இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்தப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

0 comments:

Free Blog CounterLG