Monday, April 14, 2008

நெல்லையிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு - பலர் ஓட்டம்!

நெல்லை: தூத்துக்குடியின் பிரபல தாதாக்கள் ஜெயக்குமாரும், கவிக்குமாரும் சென்னையில் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் ரவுடிகளின் பட்டியைல போலீஸார் தூசு தட்டி எடுத்து வருகின்றனர். இதனால் என்கெளன்டருக்குப் பயந்து பல ரவுடிகள் தலைமறைவாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வருவதை அடுத்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.

ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கூலிப்படையாக செயல்படுபவர்கள், போதை பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை கடத்துபவர்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை சுட்டு பிடிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலும் போலீசார் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். நெல்லையில் பிடிபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி செந்திலும் கூலிப்படையாக செயல்பட்டு 10க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளார். மாவட்டத்தில் நடந்த கொலைகளிலும் கூலிப்படையினரின் பங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.பணத்துக்காக கொலை செய்யும் கூலிபடையை சேர்ந்த ரவுடிகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புதிய குற்றவாளியாக இருப்பதால் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிலர் பழைய குற்றவாளிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டு தங்களது பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்று குற்றச் செயல்களின் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையினரை தனியாக அடையாளம் காண டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து கூலிப்படையினர் பட்டியலை போலீசார் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தாங்கள் என்கெளன்டர் மூலம் போட்டுத் தள்ளப்படுவோமோ என்று பயந்து பல பிரபல ரவுடிகள் பதுங்க ஆரம்பித்துள்ளனர். பலர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து வேறு இடங்ளுக்கு ஓடி வருகின்றனராம்.

0 comments:

Free Blog CounterLG