Saturday, April 19, 2008

திருச்சி பேராசிரியர் அயோத்திக்கு சாகித்ய அகாதமி இலக்கிய விருது

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வி.அயோத்திக்கு சாகித்ய அகாதமியின், மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியத்துக்கான விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாதமி பொன்விழாவையொட்டி கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் அகில இந்திய அளவில் மொழிபெயர்ப்புத் திறன் போட்டி நடத்தப்பட்டது.

30 இந்திய மொழிகளில் இருந்து பல்வேறு முக்கிய இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் இதில் சமர்ப்பிக்கப்பட்டன.
போட்டி முடிவில் பெரும்பாலான பரிசுகளை வங்காள மொழி இலக்கிய படைப்புகள் அள்ளிச் சென்றன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் டாக்டர் வி. அயோத்திக்கு மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியத்துக்கான விருது கிடைத்துள்ளது.

ஏராளமான தமிழ் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் செவிவழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் பேராசிரியர் அயோத்தி நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார்.

தென்னிந்தியாவில் 2 பேருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இதில் அயோத்தி ஒருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான ரொக்கப் பரிசும், பாராட்டுப் பட்டயமும் அயோதிக்கு வழங்கப்படும்.




0 comments:

Free Blog CounterLG