Saturday, April 19, 2008

மும்பை இரயிலில் அடிபட்டு இதுவரை 20,000 பேர் சாவு

தினமும் 70 இலட்சம் மக்கள் பயணிக்கும் மும்பை இரயில்களில் விபத்துக்களில் சிக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20,706 பேர் இறந்துள்ளனர். சேதன் கோதாரி என்கிற தன்னார்வலர் ஓருவரால் Right to Information Act. சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களிலிருந்து இது கிடைக்கப்பெற்றது. இரயில்வே கமிஷனர் A.k. சர்மா கூறுகையில் நாட்டில் அதிகம் பேர் பயணிக்கும் மும்பை இரயிலில் தினமும் 10 பேர் விபத்துக்கள்ளாகின்றனர் என்று தெரிவித்தார்.

அதிக விபத்துக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுவதில் தான் ஏற்படுகிறது.சில சமயம் மின்சாரம் தாக்கியும் இரயில் பெட்டி வாசலில் தொங்கி வருகையில் தோலில் போட்டிருக்கும் பை மின்கம்பம் போன்றவற்றில் பட்டு கீழே விழுந்தும் விபத்துக்கள் நடக்கின்றன.



0 comments:

Free Blog CounterLG