Friday, May 2, 2008

தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று _ அமெரிக்கா மதிப்பீடு

தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று _ அமெரிக்கா மதிப்பீடு

தீவிரவாதத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கணித்துள்ளது.

தீவிரவாதம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வருடாந்திர அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் 2007 ம் ஆண்டில் தீவிரவாதத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாத செயல்கள் தற்போது குறைந்து வருகின்றன. ஆனால் அதே சமயம் பாகிஸ்தானில் லஸ்கர் _ இ_ தோய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் தாக்குதல்களை நடத்த தொடர்ந்து திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்த தங்களது இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் இதில் அல் _ குவைதாவும் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2007 ல் மட்டும் தீவிரவாத தாக்குதல்களில் மொத்தம் 2300 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்திய அரசின் சட்ட அமலாக்கல் மற்றும் சட்ட முறைகள் தீவிரவாதத்தை ஒடுக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நீதிமன்ற நடைமுறைகள் ஆமை வேகத்தில் இருக்கின்றன. அதோடு அவை ஊழல் மிகுந்ததகாவும் உள்ளன. தீவிரவாத வழக்குகள் முடிவதற்கு ஆண்டு கணக்கில் ஆகிறது. இந்தியாவில் உள்ள உள்ளூர் போலீஸ் படை போதுமான ஆட்கள் இலலாமல் செயல்படுகிறது. போலீசாருக்கு போதுமான பயிற்சிகள் கொடுக்கப்டுவதில்லை. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அவர்களுக்கு போதுமான நவீன உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை என்றும அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் சம்ஜூவதா எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG