Friday, May 2, 2008

கர்நாடகாவில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கர்நாடகாவில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கோலார் தங்கவயல் பகுதி அ.தி.மு.க வேட்பாளராக ஆனந்தராஜ் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க வினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர் இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேண்டுகோளின் பேரில் அ.தி.மு.க வைச்ச சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ விஸ்வநாதன், சரோஜா, மாநில துணை செயலாளர் சிவசண்முகம், தலைமை கழக பேச்சாளர் குலாப்ஜான், அவைத்தலைவர் சதாசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் இப்பகுதியில் முகாமிட்டு அதிமுக வேட்பாளர் ஆனந்தராஜிற்கு ஆதரவாக வீடுவீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வேட்பாளருடன் சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு இப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து தங்களது வாக்குகளை இரட்டை இலைக்கு செலுத்தி ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

0 comments:

Free Blog CounterLG