Friday, May 9, 2008

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

இலங்கையில் அத்தியா வசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் தமிழ் குடும்பங்கள் அல்லல் பட்டு வருவதாக ராமேசு வரம் வந்த அகதிகள் தெரி வித்தனர்.

அகதிகள் வருகை

இலங்கையில் இருந்து 4 குடும்பத்தை சேர்ந்த 5 ஆண் கள், 6 பெண்கள், 3 ஆண் குழந் தைகள், 5 பெண் குழந்தைகள் என 19 பேர் ஒரு பிளாஸ்டிக் படகில் அகதியாக தமிழகம் புறப்பட்டார்கள். இவர்கள் நேற்று நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரை வந்தி றங்கினார்கள்.
அவர்கள் நேற்று காலையில் விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் மண்டபம் அகதி கள் முகாமுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

விலையேற்றம்

இவர்களில் மன்னாரை சேர்ந்த மீனவர் இருதயதாசன் புரூஸ்(46), நிருபர்களிடம் கூறியதாவது:- பாதுகாப்பு நட வடிக்கை என்று கூறி இலங்கை கடற்படையினர் எங்களை கடல் செல்ல அனுமதிப்ப தில்லை. அனுமதி தந்தாலும் குறுகிய நேரத்தில் கரைக்கு திரும்புமாறு வற்புறுத்துகிறார் கள். மீன்பிடித்துவிட்டு வர தாமதமானால் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்பு றுத்துகிறார்கள்.

இதனால் என் குடும்பம் வருமானமின்றி தவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசதிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து விட் டது. ஒரு தேங்காய் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி 90 ரூபாய்க்கும், காய்கறிகள் 200 ரூபாய்க்கும், மண்எண்ணை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின் றன.
சுட்டுக்கொலை

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார் கள். ஆனால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளா மல் இலங்கை அரசு ராணு வத்தை கொண்டு போராட் டத்தை ஒடுக்க நினைக்கிறது.

மன்னார் அச்சங்குளம் பகு தியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்து சென்ற 2 இளை ஞர்களை மோட்டார் சைக்கி ளில் வந்த இலங்கை ராணுவத் தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சென்றுவிட்ட னர். உணவும் கிடைக்கவில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை என்பதால், எனது மனைவியின் நகைகளை விற்று படகு கட்ட ணமாக ரூ.40 ஆயிரம் கொடுத்து அகதியாக வந்தேன். என் மனைவி அருள்மேரி(47), மகன் தேவராஜ் புரூஸ்(24), மகள்கள் சூசையம்மாள்(16), சகபரா(15) ஆகியோரையும் அகதியாக அழைத்து வந்துள் ளேன். எனது மகள்கள் இரு வரும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ளார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Free Blog CounterLG