தமிழ்நாட்டில் மக்கள் ஒன்றுதிரண்டு மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் கேட்டுக் கொண்டார்.
கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இராம கோபாலனின் சதாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை துடியலூரில் நடத்தப்பட்டது. இராம கோபாலன் பேசியது: தமிழ்நாட்டில் மத மாற்றம் தீவிரமாக நடக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும். வீதிதோறும் மத மாற்ற தடுப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மதம் மாறியவர்கள் தாய்மதம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.
கோயில்களை பராமரிக்கும் பணியை அரசு விட்டுவிட வேண்டும். கோவை வடமதுரை விருந்தீஸ்வர் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இது போன்ற நிலங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. இவற்றை அரசு மீட்க வேண்டும் என்றார்.
Wednesday, April 16, 2008
மத மாற்றம் தடுக்கப்பட வேண்டும்: இராம கோபாலன்
Posted by
udanadi
at
4/16/2008 12:42:00 AM
Labels: தமிழ்நாடு, மதமாற்றம், ராம கோபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment