Wednesday, April 16, 2008

பஹ்ரைனில் தொழிலாளர்களை லாரியில் ஏற்றிச் செல்லத் தடை

லாரி மற்றும் பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் தொழிலாளர்கள் ஏற்றிச் செல்வதற்கு பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

பஹ்ரைன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பணிக்கு அழைத்து வருவதற்காக லாரி உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில வாகனங்கள் பாதுகாப்பு குறைபாடு உள்ளவையாக உள்ளன.

இந்நிலையில் பஹ்ரைன் அமைச்சர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.இதில், தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களின் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் லாரி உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத வாகனங்களுக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

0 comments:

Free Blog CounterLG