Saturday, May 3, 2008

பனி மழை தூதரானார் நமீதா

நமீதாவை பார்த்தவுடனே நமக்குள் ஒரு பனிமழை பெய்யும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு பனிமழை அரங்கத்துக்கு தூதராகியிருக்கிறார் நமீதா என்பதுதான் நாம் சொல்ல வரும் தகவல். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், 'ஸ்பைல்பவுண்ட்' பொழுதுபோக்கு நிறுவனமும் இணைந்து சென்னை தீவுத்திடலில் பனிமழை பொழியும் ஒரு பிரமாண்ட அரங்கை அமைத்துள்ளன. கோடை விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் பனிச்சறுக்கு, செயற்கை பனிப்பொழிவு, பனிக்கட்டி விளையாட்டு என ஜில்லிட வைக்கும் அம்சங்கள் நிறைய இருக்கிறதாம்.

இந்த நிகழ்ச்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ள நமீதா, பார்வையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்த உள்ளாராம்.

0 comments:

Free Blog CounterLG