Saturday, May 3, 2008

வார்னே, கங்குலி 10% தண்டம் கட்டவேண்டும்

கொல்கத்தா அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் கடந்த வியாழக்கிழமை ஆட்டம் நடைபெற்றது. அதில் விக்கெட் தொடர்பாக திருப்தியடையாத கங்குலி நடுவர் பிரதாப் குமாரிடம் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்ய தலையிட்டார். பிறகு மூன்றாவது நடுவர் அசாத் ரவ்ப் கங்குலிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

இதுபற்றி எரிச்சலடைந்த ராஜஸ்தான் காப்டன் வார்னே, கங்குலி மீது பாய்ந்தார். கங்குலி ஐபிஎல் உடன்படிக்கையின் படி செயல்படவில்லை என்று கருத்து தெரிவித்தார்.

விளையாட்டின் போது நடுவரை குறிக்கீடுது செய்த கங்குலிக்கு ஐசிசி சட்டத்தின் படி லெவல் 1 குற்றமிழைக்கப்பட்டவராக கருதப்பட்டு, ஆட்ட நடுவர் பரூக் இன்ஞினியர் ஒழுங்கு நடவடிக்கையாக 10% சதவீத தண்டம் கட்ட உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஆட்டம் தொடர்பான வற்றை பொது இடத்தில் விமர்சித்ததற்காக வார்னே செக்சன் 1.7 ன் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்பட்டு அவருக்கும் 10% தண்டம் விதித்துள்ளார். நடுவர் குமார் ஒரு ஆட்டத்திற்கு நடுவர் தகுதியை இழந்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG