Wednesday, May 14, 2008

BCCI ஹர்பஜனுக்கு பளார்


ஸ்ரி சாந்தை கண்ணத்தில் அறைந்த குற்றத்திற்காக ஹர்பஜனுக்கு ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாட இந்திய கிர்க்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இனி இதுபோன்ற ஒழுங்கீனத்தில் நடந்துகொண்டால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹர்பஜன் ஒப்புக்கொண்டார். தற்போதுள்ள தடையின் படி அவர் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே குற்றச்சாட்டிற்காக ஐபிஎல் கிரிக்கெடில் 11 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை பற்றி கருத்து தெரிவித்த ஹர்பஜனின் பயிற்சியாளர் இந்த சம்பவத்தின் காரணமாக ஹர்பஜன் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடை அநியாயமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த தடையால் அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறும் ஒடிஐ போட்டியிலும், பாகிஸ்தானில் நடக்கவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஹர்பஜன் விளையாட முடியாது.

0 comments:

Free Blog CounterLG