Friday, May 23, 2008

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மே 30ல் இந்திய அணி தேர்வு.

வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடர், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி வரும் 30ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது.இதற்காக இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.ஐ.பி.எல். போட்டிகளில் அபாரமாக விளையாடும் வீரர்களு‌க்கு நிச்சயமாக ஒரு நாள் அணியில் தேர்வாக வாய்ப்பிருக்கிறது என்று தேர்வாளர் புபீந்தர் சிங் தெரிவித்தார்.ஆனால் அனைத்துத் தேர்வுக் குழு உறுப்பினர்களும் இதனை ஏற்கவில்லை. ஏற்கனவே இந்திய ஒரு நாள் அணி பலமாகவே உள்ளது, இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் திறமையை நிரூபித்துள்ள புது வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய மண்டல தேர்வாளர் ஜக்தாலே கூறியுள்ளார்.

0 comments:

Free Blog CounterLG