Sunday, May 4, 2008

கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது

கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "வீரமணி சமூக நீதி விருது' வழங்கப்படுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் "வீரமணி சமூக நீதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் செப்டம்பர் 2 - வது வாரத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் பங்கேற்கின்றனர்.

0 comments:

Free Blog CounterLG